×

பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை; மின்வெட்டு தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைத் தவிர்த்து, பல்வேறு மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்னொருபுறம் மின் அழுத்தக் குறைவால் வீடுகளில் உள்ள குளிரூட்டிகள், மின் விசிறி ஆகியவற்றை இயக்க முடியாமல், மக்கள் உறங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கோடைக்காலத்தில் தமிழகத்தின் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதற்கேற்ற வகையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக ஒப்பந்தங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின்திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. நிலுவையில் உள்ள மின்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை; மின்வெட்டு தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Palamaka ,Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,Pamaka ,Ramdas ,Dinakaran ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண்...